ஒரு காட்டில் உள்ள பசுக்கள் எல்லாம் வேகமாக காட்டைவிட்டு ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு யானை வந்து பசுவிடம் கேட்டதாம், ஏன் எல்லோரும் காட்டை விட்டுஓடிக்கொண்டிருகிறர்கள் என்று அதற்கு அந்த பசு சொன்னதாம், காட்டிலுள்ள எருமைமாடுகளை எல்லாம் சிறை பிடிக்க அரசு உத்தரவு போட்டுள்ளதாம் என்று, அதற்கு அந்த யானை கேட்டதாம் எருமைகளை பிடிக்கத்தானே அரசு உத்தரவு போட்டுள்ளது நீங்கள் ஏன் ஓடிக்கொண்டிருக்கிறீகள்.அந்த பசு சொன்னதாம் நான் எருமை இல்லை பசு என்று உனக்கு தெரியும் அதை நான் இந்த நீதி மன்றத்தில் நிரூபிக்க குறைந்தது எனக்கு 30 வருடங்கள் ஆகும் அதனால்தான் எதற்கு வம்பு என்று நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன். இதை கேட்ட பின் அந்த யானையும் ஓட ஆரம்பித்ததாம் அந்த கட்டை விட்டு.
இந்திய நீதிமன்றம் தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.(ஆனால் எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ அவர்களுக்கு சாதகமாக 90% தீர்ப்பு வரும் )இந்த ஆண்டு வரை நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 43 லட்சம்(civil & criminal etc) இந்த நிலையில் உச்ச நநீதிமன்றம் எதாவது ஒரு அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்கினால்(விதிவிலக்காக) அடுத்த ஒருமணி நேரத்தில் ஜாமீன் வழங்க மட்டும் இவர்களுக்கு நேரம் இருக்கிறது.
நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம் அனால் ஒரு அரசியல்வாதி மட்டும் தண்டிக்கப்படக்கூடாது என்பது இந்தியாவில் எழுதப்படாத விதி. இது மட்டும் அல்ல சில வழக்குகளுக்கு 3 அல்லது 5 பேர் கொண்ட குழு 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்குகிறது என்றல் அதில் 3 பேர் ஒரு தீர்ப்பும் 2 பேர் வேறொரு தீர்ப்பும் கொடுப்பார்கள். பின் அந்த வழக்கு மேலும் பல ஆண்டுகள் இழுக்கும்.இவர்கள் அனைவரும் வேறு வேறு பாடத்திட்டத்தில் படித்து வந்தவர்கள் என்று நாம் நினைத்துக்கொள்ள வேண்டும்.இதை விட கொடுமை ஒருவருக்கு ஒரு நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கினால், வேறொரு நீதிமன்றம் அவர் நிரபராதி என்று தீர்ப்பு வழங்குகிறது இதில் யார் சொன்னது சரி யார் சொன்னது தவறு, முதலில் தவறாக தீர்ப்பு சொன்னவருக்கு என்ன தண்டனை.
ஆங்கிலேயர்கள் justice ஆக இருக்கும் போதும் கோடைகாலத்தில் அவர்களால் இந்தியாவில் தாக்குபிடிக்கமுடியவில்லை அதனால் அவர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இப்பொது உள்ளவர்களுக்கு எதற்கு விடுமுறை என்று தெரியவில்லை. இவர்கள் வழங்குகிற நீதிக்கு இவர்களை my lord,My highness என்றுவேற இவர்களை அழைக்க வேண்டுமாம்.
இந்தியாவில் நீதி வழங்க படுகிறது என்பதை விட விற்கப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும்.
Comments
Post a Comment