அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின், எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்; இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின், வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! -புறநானுறு பேராசைக்காகவும் பொன்பொருளுக்காகவும், எல்லை விரிவாக்கத்துக்காகவும் மூவேந்தர்களும் ஒரு குறுநில மன்னன் மீது போர்தொடுத்து கடைசியில் தோல்வியை பரிசாக பெற்று பாரியின் புகழை பறம்பு மலை கடந்து தமிழ் தேசம் முழுவதும் பரவியத்தின் கதை. பாரியின் புகழை பாணர்கள் பாடக்கேட்டு இது உண்மையா என்று அறிய கபிலர் அவர்கள் பறம்பு மலை செல்கிறார், அங்கிருந்து நீலன் என்பவன் அவரை பாரி இருக்கும் எவ்வியூர் அழைத்து செல்கிறான் அங்கு பாரி தமிழ் பெருங்கவி பறம்பு வந்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். அங்கு நடக்கும் கொற்றவை கூத்தில் பறம்பில் உள்ள 14 குடிகளும் தாங்கள் குடிகள் எவ்வாறு வேந்தர்களால் அழிக்கப்பட்டது என்பதை பாட்டாக பாடி கூத்தாடுவார்கள். பாண்டிய நாட்டில் குலசேகரபாண்டியன் மகன் பொதியவெற்பனுக்கு தி
Learning always make you young.