தமிழ்நாட்டில் அரசியல் எவ்வளவு தரம் தாழ்த்துவிட்டது என்று எல்லோருக்கும் தெரியும். திராவிட கட்சிகள் எதற்கு ஆரம்பிக்கப்பட்டது என்ற அடிப்படையை மறந்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறது. அண்ணா அவர்கள் அடிக்கடி சொல்வாராம் நம்கட்சி வளர்ந்தது வாய்மையால் என்று. அவர் சொன்ன வாய்மை எதுவென்றும் அவரே சொல்கிறார் , பேசுகின்ற வாயாலும், எழுதுகின்ற மையலும் என்று. ஆனால் இன்று அந்த இரண்டு கட்சிகளின் தலைவர்கள் பேசுவதை பார்த்தால் இந்த கட்சிகளை வளர்த்து ஆளாக்கிய தலைவர்கள் நொந்துவிடுவார்கள். அவர்கள் பேசுவதால் மட்டும் அல்ல, அவர்கள் செயலிலும் தெரிகிறது அவர்களால் இனி ஒரு உபயோகமமும் தமிழ்நாட்டிற்கில்லை என்று. இனி திராவிட காட்சிகளை கைக்கழுவிட்டு நகரவேண்டும் நாம். இப்படி சொன்னால் நிறையபேர் கேட்பார்கள் திராவிடம் தமிழருக்கு எதுவும் செய்யவில்லையா என்று, செய்தது இல்லை என்றுயாரும் மறுக்கவில்லை மறுக்கவும்கூடாது, அனால் இன்று அந்த திராவிட சித்தாந்தத்தை அவர்களே மறந்துவிட்டார்கள். எனவே இனிவரும் காலதேர்தல்களில் உங்களுக்கானவர்களுக்கு வாக்குகளை செலுத்துங்கள், ஆனால் விற்காதீர்கள்.நீங்கள் செலுத்தும் வாக்கு உங்களுக்கானது மட்டும் அல்ல உங்கள் எதிர்கால சந்ததியினர்கனது .
எழுத்தாளர் இமையம் அவர்களால் 25 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவல், ஊர்காரர்களை எதிர்பார்த்து வாழ்கையை நடத்தும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை காலமாற்றங்களினால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும், ஊரார்களின் மனமும் காலத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு மாறுகின்றது என்றும் கூறும் நாவல் . ஆரோக்கியம் , சவுரி ,ஜோசப் ,சகாயம் ,மேரி மற்றும் பீட்டர் இவர்கள்தான் கதையின் முதன்மை பாத்திரங்கள், ஊரில் இருக்கும் வண்ணான் குடும்பம், காலையில் துணிகளை வாங்கி கொண்டு தொரப்பாட்டுக்கு சென்று வெளுத்து பின் இரவு சாப்பாட்டுக்காக குண்டங்களை தூக்கிக்கொண்டு ஓவொரு வீடாக சென்று, அம்மா வண்ணாத்திமக வந்திருக்கேனு சொல்லி சாப்பாடு வாங்கி வந்து சாப்பிடுவது, பின் விதைப்பு அறுப்பு காலங்களில் களத்திற்கு சென்று வேலை செய்து தானியங்களை சேர்ப்பது. இதுதான் அவர்களது வாழ்க்கை . இதன்பின் வரும் அவர்கள் குடும்ப பிரச்சினைகள் அடுத்து ஊரார்களின் சுரண்டல்கள் மகன்கள் மகள் வாழ்க்கை, இனி இந்த ஊரில் நம்மால் வாழ முடியுமா என்ற எண்ணங்கள், பின் ஊரில் ஒரு பெண்ணுக்கு பிரசவவலி எடுத்ததும் முதலில் வந்து ஆரோக்கியத்தை கூப்பிடும் உறவுக்காரர்கள் , பிரசவ
Comments
Post a Comment