அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!
-புறநானுறு
பேராசைக்காகவும் பொன்பொருளுக்காகவும், எல்லை விரிவாக்கத்துக்காகவும் மூவேந்தர்களும் ஒரு குறுநில மன்னன் மீது போர்தொடுத்து கடைசியில் தோல்வியை பரிசாக பெற்று பாரியின் புகழை பறம்பு மலை கடந்து தமிழ் தேசம் முழுவதும் பரவியத்தின் கதை.
பாரியின் புகழை பாணர்கள் பாடக்கேட்டு இது உண்மையா என்று அறிய கபிலர் அவர்கள் பறம்பு மலை செல்கிறார், அங்கிருந்து நீலன் என்பவன் அவரை பாரி இருக்கும் எவ்வியூர் அழைத்து செல்கிறான் அங்கு பாரி தமிழ் பெருங்கவி பறம்பு வந்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். அங்கு நடக்கும் கொற்றவை கூத்தில் பறம்பில் உள்ள 14 குடிகளும் தாங்கள் குடிகள் எவ்வாறு வேந்தர்களால் அழிக்கப்பட்டது என்பதை பாட்டாக பாடி கூத்தாடுவார்கள்.
பாண்டிய நாட்டில் குலசேகரபாண்டியன் மகன் பொதியவெற்பனுக்கு திருமண ஏற்பாடு நடைபெறுகிறது அதற்காக பறம்பு நாட்டின் எல்லையில் வாழும் சிற்றரசரான மையூர்கிழார் பறம்பு நாட்டின் குறி சொல்லும் பறவையான தேவாவாக்கு விலங்கை பரிசளிக்க விழைகிறார். இந்த விலங்கானது எப்போதும் தெற்கு திசை நோக்கி அமரக்கூடிய சிறப்புவாய்ந்தது, இதனால் கடல் வாணிபத்தில் பெயர்பெற்ற பாண்டியன் மரக்கலங்கள் திசைமாறி செல்லாமல் இருக்க இதைப்போன்ற ஒரு விலங்கு நம்மிடம் இருப்பது அவசியம் என்று அதை பிடித்து வர ஆள் அனுப்பி அதில் தோல்வி அடைந்து பின் பறம்பு வீரர்களால் அவன் வைப்பூர் துறைமுகம் தீக்கிரையாக்கப்படுகிறது, இதனால் கோபம் கொண்ட பாண்டியன் பரம்புமீது போர் தொடுக்கிறான்.
குலசேகர பாண்டியனுடன் சேர்ந்துகொண்டு சேர மன்னன் உதயன்சேறல் மற்றும் சோழ மன்னன் சோழவேழேனும் சேர்ந்து படை எடுத்து சென்று பறம்பின்கீழ் இருக்கிறார்கள். பெரும் போரை தடுக்க கபிலரும் முயன்று பார்க்கிறான் ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவர் பாரியின் பக்கம் நின்றுகொண்டு பாரிக்காகவும் பறம்பு மலைக்காகவும் பேசுகிறார்.
இதன் பின் போரில் பலவகையான உத்திகளை கையாண்டு பாரியை வீழ்த்த நினைத்து கடைசியில் தோற்று ஓடுகிறார்கள் வேந்தர்கள்
பாண்டிய நாட்டில் குலசேகரபாண்டியன் மகன் பொதியவெற்பனுக்கு திருமண ஏற்பாடு நடைபெறுகிறது அதற்காக பறம்பு நாட்டின் எல்லையில் வாழும் சிற்றரசரான மையூர்கிழார் பறம்பு நாட்டின் குறி சொல்லும் பறவையான தேவாவாக்கு விலங்கை பரிசளிக்க விழைகிறார். இந்த விலங்கானது எப்போதும் தெற்கு திசை நோக்கி அமரக்கூடிய சிறப்புவாய்ந்தது, இதனால் கடல் வாணிபத்தில் பெயர்பெற்ற பாண்டியன் மரக்கலங்கள் திசைமாறி செல்லாமல் இருக்க இதைப்போன்ற ஒரு விலங்கு நம்மிடம் இருப்பது அவசியம் என்று அதை பிடித்து வர ஆள் அனுப்பி அதில் தோல்வி அடைந்து பின் பறம்பு வீரர்களால் அவன் வைப்பூர் துறைமுகம் தீக்கிரையாக்கப்படுகிறது, இதனால் கோபம் கொண்ட பாண்டியன் பரம்புமீது போர் தொடுக்கிறான்.
குலசேகர பாண்டியனுடன் சேர்ந்துகொண்டு சேர மன்னன் உதயன்சேறல் மற்றும் சோழ மன்னன் சோழவேழேனும் சேர்ந்து படை எடுத்து சென்று பறம்பின்கீழ் இருக்கிறார்கள். பெரும் போரை தடுக்க கபிலரும் முயன்று பார்க்கிறான் ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவர் பாரியின் பக்கம் நின்றுகொண்டு பாரிக்காகவும் பறம்பு மலைக்காகவும் பேசுகிறார்.
இதன் பின் போரில் பலவகையான உத்திகளை கையாண்டு பாரியை வீழ்த்த நினைத்து கடைசியில் தோற்று ஓடுகிறார்கள் வேந்தர்கள்
கதையின் ஆசிரியர் சு . வெங்கடேசன் அவர்கள் எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்தாரென்று தெரியவில்லை ஆனால் ஓவொரு வரியிலும் நிறைய விடயங்களை கூறியிருக்கிறார். அவருடைய உழைப்பு இதை படிக்கும் அனைவரும் உணர்வார்கள்.
எவ்வளவு தமிழ் பெயர்கள், ஆயுதங்கள், மலர்கள், உயிரினங்கள், இயற்கையை எவ்வளவு அழகாக விவரித்திருக்கிறார். அவற்றில் சில ஏழிலைப்பாலை பூ, சாலக்கொடி அறுபதாம்கோழி,காக்கைவிரிச்சி,
கண்டிப்பாக தமிழ் மக்கள் அனைவரும் படிக்கச் வேண்டிய நாவல் இது. அதுவும் மக்களை வழிநடத்த தெரியாத தற்குறி ஆட்சியாளர்களின் கையில் அகப்பட்டுக்கொண்டு இருக்கும் நம் ஒரு குறுநில மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன் இயைற்கைக்காக எவ்வளவு போராடி இருக்கான் என்பதை அறிந்து அடுத்த தலைமுறைக்கு அதை பாதுகாத்து அளிக்க வேண்டிய கடமையை அனைவரும் உணரவேண்டும்.
கண்டிப்பாக தமிழ் மக்கள் அனைவரும் படிக்கச் வேண்டிய நாவல் இது. அதுவும் மக்களை வழிநடத்த தெரியாத தற்குறி ஆட்சியாளர்களின் கையில் அகப்பட்டுக்கொண்டு இருக்கும் நம் ஒரு குறுநில மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன் இயைற்கைக்காக எவ்வளவு போராடி இருக்கான் என்பதை அறிந்து அடுத்த தலைமுறைக்கு அதை பாதுகாத்து அளிக்க வேண்டிய கடமையை அனைவரும் உணரவேண்டும்.
Comments
Post a Comment