Skip to main content

வேள்பாரி -சு . வெங்கடேசன்


p100b.jpgஅற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!
                                                                                      -புறநானுறு 

             பேராசைக்காகவும் பொன்பொருளுக்காகவும், எல்லை  விரிவாக்கத்துக்காகவும் மூவேந்தர்களும் ஒரு குறுநில மன்னன் மீது போர்தொடுத்து கடைசியில் தோல்வியை பரிசாக பெற்று பாரியின் புகழை பறம்பு மலை கடந்து தமிழ் தேசம் முழுவதும் பரவியத்தின் கதை.

பாரியின் புகழை பாணர்கள் பாடக்கேட்டு இது உண்மையா என்று அறிய கபிலர் அவர்கள் பறம்பு மலை செல்கிறார், அங்கிருந்து நீலன் என்பவன் அவரை பாரி இருக்கும் எவ்வியூர் அழைத்து செல்கிறான் அங்கு பாரி தமிழ் பெருங்கவி பறம்பு வந்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். அங்கு நடக்கும் கொற்றவை கூத்தில் பறம்பில் உள்ள 14 குடிகளும் தாங்கள்  குடிகள் எவ்வாறு வேந்தர்களால் அழிக்கப்பட்டது என்பதை பாட்டாக பாடி கூத்தாடுவார்கள்.

பாண்டிய நாட்டில் குலசேகரபாண்டியன் மகன் பொதியவெற்பனுக்கு திருமண ஏற்பாடு நடைபெறுகிறது அதற்காக பறம்பு நாட்டின் எல்லையில் வாழும் சிற்றரசரான மையூர்கிழார் பறம்பு நாட்டின் குறி சொல்லும் பறவையான தேவாவாக்கு விலங்கை பரிசளிக்க விழைகிறார். இந்த விலங்கானது எப்போதும் தெற்கு திசை நோக்கி அமரக்கூடிய சிறப்புவாய்ந்தது, இதனால் கடல் வாணிபத்தில் பெயர்பெற்ற பாண்டியன் மரக்கலங்கள் திசைமாறி  செல்லாமல் இருக்க இதைப்போன்ற ஒரு விலங்கு நம்மிடம் இருப்பது அவசியம் என்று அதை பிடித்து வர ஆள் அனுப்பி அதில் தோல்வி அடைந்து பின் பறம்பு வீரர்களால் அவன் வைப்பூர் துறைமுகம் தீக்கிரையாக்கப்படுகிறது, இதனால் கோபம் கொண்ட பாண்டியன் பரம்புமீது போர் தொடுக்கிறான்.

குலசேகர பாண்டியனுடன் சேர்ந்துகொண்டு சேர மன்னன் உதயன்சேறல்  மற்றும் சோழ மன்னன் சோழவேழேனும் சேர்ந்து  படை எடுத்து சென்று பறம்பின்கீழ் இருக்கிறார்கள். பெரும் போரை தடுக்க கபிலரும் முயன்று பார்க்கிறான் ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவர் பாரியின் பக்கம் நின்றுகொண்டு பாரிக்காகவும் பறம்பு மலைக்காகவும் பேசுகிறார்.

இதன் பின் போரில் பலவகையான உத்திகளை கையாண்டு பாரியை வீழ்த்த நினைத்து கடைசியில் தோற்று ஓடுகிறார்கள் வேந்தர்கள் 

கதையின் ஆசிரியர் சு . வெங்கடேசன் அவர்கள் எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்தாரென்று தெரியவில்லை ஆனால் ஓவொரு வரியிலும் நிறைய விடயங்களை கூறியிருக்கிறார். அவருடைய உழைப்பு இதை படிக்கும் அனைவரும் உணர்வார்கள்.

எவ்வளவு தமிழ் பெயர்கள், ஆயுதங்கள், மலர்கள், உயிரினங்கள், இயற்கையை எவ்வளவு அழகாக விவரித்திருக்கிறார். அவற்றில் சில  ஏழிலைப்பாலை பூ, சாலக்கொடி அறுபதாம்கோழி,காக்கைவிரிச்சி,

கண்டிப்பாக தமிழ் மக்கள் அனைவரும் படிக்கச் வேண்டிய நாவல் இது. அதுவும் மக்களை வழிநடத்த தெரியாத தற்குறி ஆட்சியாளர்களின் கையில் அகப்பட்டுக்கொண்டு இருக்கும் நம் ஒரு குறுநில மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன் இயைற்கைக்காக எவ்வளவு போராடி இருக்கான் என்பதை அறிந்து அடுத்த தலைமுறைக்கு அதை பாதுகாத்து   அளிக்க வேண்டிய கடமையை அனைவரும் உணரவேண்டும்.
 
           

 


Comments

Popular posts from this blog

கோவேறு கழுதைகள்-இமையம்

எழுத்தாளர் இமையம் அவர்களால் 25 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவல், ஊர்காரர்களை எதிர்பார்த்து வாழ்கையை நடத்தும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை காலமாற்றங்களினால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும், ஊரார்களின் மனமும் காலத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு மாறுகின்றது என்றும் கூறும் நாவல் . ஆரோக்கியம் , சவுரி ,ஜோசப் ,சகாயம் ,மேரி மற்றும் பீட்டர் இவர்கள்தான் கதையின் முதன்மை பாத்திரங்கள், ஊரில் இருக்கும் வண்ணான் குடும்பம், காலையில் துணிகளை வாங்கி கொண்டு தொரப்பாட்டுக்கு சென்று வெளுத்து பின் இரவு சாப்பாட்டுக்காக குண்டங்களை தூக்கிக்கொண்டு ஓவொரு வீடாக சென்று, அம்மா வண்ணாத்திமக வந்திருக்கேனு சொல்லி சாப்பாடு வாங்கி வந்து சாப்பிடுவது, பின் விதைப்பு அறுப்பு காலங்களில் களத்திற்கு சென்று வேலை செய்து தானியங்களை சேர்ப்பது. இதுதான் அவர்களது வாழ்க்கை . இதன்பின் வரும் அவர்கள் குடும்ப பிரச்சினைகள் அடுத்து ஊரார்களின் சுரண்டல்கள் மகன்கள் மகள் வாழ்க்கை, இனி இந்த ஊரில் நம்மால் வாழ முடியுமா என்ற எண்ணங்கள், பின் ஊரில் ஒரு பெண்ணுக்கு பிரசவவலி எடுத்ததும் முதலில் வந்து ஆரோக்கியத்தை கூப்பிடும் உறவுக்காரர்கள் , பிரசவ

இந்திய நீ(நி )தித்துறை

ஒரு காட்டில் உள்ள பசுக்கள் எல்லாம் வேகமாக காட்டைவிட்டு ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு யானை வந்து பசுவிடம் கேட்டதாம், ஏன் எல்லோரும் காட்டை விட்டுஓடிக்கொண்டிருகிறர்கள் என்று அதற்கு அந்த பசு சொன்னதாம், காட்டிலுள்ள எருமைமாடுகளை எல்லாம் சிறை  பிடிக்க அரசு உத்தரவு போட்டுள்ளதாம் என்று, அதற்கு அந்த யானை கேட்டதாம் எருமைகளை பிடிக்கத்தானே அரசு உத்தரவு போட்டுள்ளது நீங்கள் ஏன் ஓடிக்கொண்டிருக்கிறீகள்.அந்த பசு சொன்னதாம் நான் எருமை இல்லை பசு என்று உனக்கு தெரியும் அதை  நான் இந்த நீதி  மன்றத்தில் நிரூபிக்க குறைந்தது எனக்கு 30 வருடங்கள் ஆகும் அதனால்தான் எதற்கு வம்பு என்று நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன். இதை கேட்ட பின் அந்த யானையும் ஓட ஆரம்பித்ததாம் அந்த கட்டை விட்டு. இந்திய நீதிமன்றம் தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.(ஆனால் எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ அவர்களுக்கு சாதகமாக 90% தீர்ப்பு வரும் )இந்த ஆண்டு வரை நிலுவையில் உள்ள வழக்குகளின்    எண்ணிக்கை   43 லட்சம்(civil & criminal etc) இந்த நிலையில் உச்ச  நநீதிமன்றம் எதாவது ஒரு அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்கினால்( விதிவிலக்காக ) அடுத்த ஒருமணி நேரத்தில

கொலஸ்ட்ராலும்: வெளிச்சத்துக்கு வந்த மருத்துவ அரசியல்.

Sundar P  : இப்போது மருத்துவ உலகத்தில் மட்டுமல்ல... உணவுச் சந்தையிலும் பெரும் பேசுபொருளாக மாறி இருப்பது எண்ணெயும் கொலஸ்ட்ராலும்தான். அப்படி என்ன மாற்றம் நடந்துவிட்டது எண்ணெய் பயன்பாட்டில்? பண மதிப்பிழப்பு விவகாரத்தில், நாமெல்லாம் புதிய இரண்டாயிரம் ரூபாய்க்காக ஏ.டி.எம் வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, மருத்துவ உலகம் கொலஸ்ட்ரால் பற்றி, தான் ஏற்படுத்தி வந்த விழிப்புஉணர்வை வாபஸ் பெற்றுக்கொண்டது. மருத்துவ ஆராய்ச்சி இதழ்களில், கொலஸ்ட்ரால் பற்றிய தொடர் விவாதங்கள் உருவாகவும், கொழுப்பு பயமுறுத்தலை வாபஸ் பெறவும் காரணம் 2015-ம் ஆண்டின் யு.எஸ்.டயட்ரி அட்வைசரி கமிட்டியின் (USDA) அறிவிப்புதான். நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் குதிரை வண்டியில் மைக் கட்டி பிரசாரம் செய்யும் அளவுக்கு `கொலஸ்ட்ரால் உடம்புக்கு நல்லது அல்ல. எண்ணெய் மோசமானது’ என்று சொல்லிக்கொண்டிருந்த அமெரிக்க உணவியல் நிபுணர்கள், தலைகீழாக பல்டியடித்தார்கள். அமெரிக்காவின் பிரதான உணவாக இருந்த கொழுப்பு உணவுகள், இதய நோய் பயத்தால் ஒரு கட்டத்தில் தீவிர பிரசாரம் மூலம் கைவிடப்பட்டன. முட்டைகளையும், இறைச்சியையும் மிகக் குறைவாக அமெரிக்க மக்கள