Skip to main content

இயற்கை வேளாண்மை

கடைசி மரமும் வெட்டுண்டு, கடைசி நதியும் விடமேறி., கடைசி மீனும் பிடிபடும்போதுதான் உரைக்கும், பணத்தை சாப்பிட முடியாதென்று..



உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே -புறநானுறு 
                                                                                           
                                                                                   நிலத்தையும், நீரையும் பொறுத்துதான் நம் உண்ணும் உணவின் சத்துக்கள் இருக்கின்றன, ஆனால் இன்று நம் பசுமை புரட்சி(Green reevaluation) என்ற பெயரில் இரண்டையும் எவ்வளவு அசுத்தப்படுத்தமுடியுமோ, நச்சாக முடியுமோ அனைத்தையும் செய்யத்துவிட்டு இன்னும் செய்துகொண்டும் இருகின்றோம். ஆனால்  இதனால் வேளாண் குடிமக்களின் வாழ்க்கையும் பொருளாதாரமும் வளர்த்துவிட்டதா என்றல் நிச்சயமாக இல்லை.

                                                                     ரசாயன உரங்கள் சந்தைக்கு வரும்முன் விளைபொருட்களின் விலை ஒரு நிலைத்தன்மையுடன்தான்( constant ratio) இருந்தது  இப்போது எந்த ஒரு அறுவடையின் போதும் வேளாண்குடிமக்களின் எண்ணம் செலவு செய்த ரூபாய் வந்தால் போதும் என்பதுதான். ஆனால் அதற்கே வழியில்லாமல் இருக்கிறது இன்றய வேளாண்மை. ஆனால்  வேளாண்குடிமக்களிடமிருந்து வாங்கும் விலைதான் குறைவு மற்றபடி விதைகளின் விலை, இடுபொருட்களின் விலை எல்லாம் எல்லா ஆண்டும் ஏறிக்கொண்டுதான் இருக்கிறது எது எப்படி என்பது மட்டும் புரியவில்லை.

                                                        ரசாயன உரங்களின் தாக்கம் பற்றி இப்போதுதான் நாம் பேச ஆரம்பித்திருக்கிறோம், மிகவும் தாமதமாகாத்தான் அதுவும். பசுமை புரட்சி , மரபணு மாற்றப்பட்ட விதைகள், ரசாயன உரங்கள் எல்லாமும் தவறான முடிவு என்று வேளாண் துறை அதிகாரிகளே இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சில வேளாண் குடிமக்களும் இதை புரிந்துகொண்ட இயற்கை வேளாண்மை பக்கம் திரும்பியிருக்கிறார்கள் இது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.ஆனால் இனி வரவிருக்கும் அடுத்த தலைமுறை மீது நமக்கு உண்மையான  அக்கறை இருந்தால் 90 விழுக்காடு இயற்கை வேளாண்முறைக்கு மாறுவது அவசியமாகும்

   இந்த கேடுகெட்ட மத்திய, மாநில அரசுகளை நம்பி பயனில்லை, நாம் தான் நம் தலைமுறைக்காக முன்வந்து மாறவேண்டும்.

  பசுமை புரட்சியின்  விளைவு 
                                                         
 மண் மலட்டுத்தன்மை (Soil Erosion)
                                                   இன்று வேளாண்பணியில் நம் செலவிடும் பெரும்தொகை வேதியில் உரங்களுக்கானது இன்றைய நிலையில் வேதிஉரங்கள் பயன்படுத்தவில்லை என்றால் அந்த போகாஅறுவடை நட்டம்தான் என்பது பொதுவான நம்பிக்கை, அது உண்மையும்கூடத்தான். ஏன் என்றல் நாம் அந்த அளவுக்கு மண்ணை அதன் தன்மையிலிருந்து மாற்றிவைத்திருக்கிறோம்.
                                                     இரண்டம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வேதிஉப்புக்களை போர் முடிந்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது அதை உரமாக பயன்படுத்தலாம் என்ற முடிவுஎடுக்கப்பட்டது.
முதலில் அது நல்ல விளைச்சலை தந்தாலும் பின்னர் அதன் விளைவுகள் தெரியத்தொடங்கின இப்போதுள்ள மருத்துவமனைகளின் லாபத்தில் பெருமளவு பங்கு இந்த வேதிஉரங்களுக்கு உண்டு.


                 இப்பொது உள்ள 50 வயதினருக்கு மேலுள்ளவர்கள் மாத மளிகை பொருட்கள் வாங்குவதுபோல் இருதய மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை வாங்குகிறார்கள்.
                         
                முழுவதும் மாறவில்லை என்றாலும் நம் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை மட்டுமாவது நாமே விளைவித்து  நம்மை காத்துக்கொள்வோம்.


Comments

Popular posts from this blog

கோவேறு கழுதைகள்-இமையம்

எழுத்தாளர் இமையம் அவர்களால் 25 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவல், ஊர்காரர்களை எதிர்பார்த்து வாழ்கையை நடத்தும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை காலமாற்றங்களினால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும், ஊரார்களின் மனமும் காலத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு மாறுகின்றது என்றும் கூறும் நாவல் . ஆரோக்கியம் , சவுரி ,ஜோசப் ,சகாயம் ,மேரி மற்றும் பீட்டர் இவர்கள்தான் கதையின் முதன்மை பாத்திரங்கள், ஊரில் இருக்கும் வண்ணான் குடும்பம், காலையில் துணிகளை வாங்கி கொண்டு தொரப்பாட்டுக்கு சென்று வெளுத்து பின் இரவு சாப்பாட்டுக்காக குண்டங்களை தூக்கிக்கொண்டு ஓவொரு வீடாக சென்று, அம்மா வண்ணாத்திமக வந்திருக்கேனு சொல்லி சாப்பாடு வாங்கி வந்து சாப்பிடுவது, பின் விதைப்பு அறுப்பு காலங்களில் களத்திற்கு சென்று வேலை செய்து தானியங்களை சேர்ப்பது. இதுதான் அவர்களது வாழ்க்கை . இதன்பின் வரும் அவர்கள் குடும்ப பிரச்சினைகள் அடுத்து ஊரார்களின் சுரண்டல்கள் மகன்கள் மகள் வாழ்க்கை, இனி இந்த ஊரில் நம்மால் வாழ முடியுமா என்ற எண்ணங்கள், பின் ஊரில் ஒரு பெண்ணுக்கு பிரசவவலி எடுத்ததும் முதலில் வந்து ஆரோக்கியத்தை கூப்பிடும் உறவுக்காரர்கள் , பிரசவ

இந்திய நீ(நி )தித்துறை

ஒரு காட்டில் உள்ள பசுக்கள் எல்லாம் வேகமாக காட்டைவிட்டு ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு யானை வந்து பசுவிடம் கேட்டதாம், ஏன் எல்லோரும் காட்டை விட்டுஓடிக்கொண்டிருகிறர்கள் என்று அதற்கு அந்த பசு சொன்னதாம், காட்டிலுள்ள எருமைமாடுகளை எல்லாம் சிறை  பிடிக்க அரசு உத்தரவு போட்டுள்ளதாம் என்று, அதற்கு அந்த யானை கேட்டதாம் எருமைகளை பிடிக்கத்தானே அரசு உத்தரவு போட்டுள்ளது நீங்கள் ஏன் ஓடிக்கொண்டிருக்கிறீகள்.அந்த பசு சொன்னதாம் நான் எருமை இல்லை பசு என்று உனக்கு தெரியும் அதை  நான் இந்த நீதி  மன்றத்தில் நிரூபிக்க குறைந்தது எனக்கு 30 வருடங்கள் ஆகும் அதனால்தான் எதற்கு வம்பு என்று நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன். இதை கேட்ட பின் அந்த யானையும் ஓட ஆரம்பித்ததாம் அந்த கட்டை விட்டு. இந்திய நீதிமன்றம் தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.(ஆனால் எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ அவர்களுக்கு சாதகமாக 90% தீர்ப்பு வரும் )இந்த ஆண்டு வரை நிலுவையில் உள்ள வழக்குகளின்    எண்ணிக்கை   43 லட்சம்(civil & criminal etc) இந்த நிலையில் உச்ச  நநீதிமன்றம் எதாவது ஒரு அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்கினால்( விதிவிலக்காக ) அடுத்த ஒருமணி நேரத்தில

கொலஸ்ட்ராலும்: வெளிச்சத்துக்கு வந்த மருத்துவ அரசியல்.

Sundar P  : இப்போது மருத்துவ உலகத்தில் மட்டுமல்ல... உணவுச் சந்தையிலும் பெரும் பேசுபொருளாக மாறி இருப்பது எண்ணெயும் கொலஸ்ட்ராலும்தான். அப்படி என்ன மாற்றம் நடந்துவிட்டது எண்ணெய் பயன்பாட்டில்? பண மதிப்பிழப்பு விவகாரத்தில், நாமெல்லாம் புதிய இரண்டாயிரம் ரூபாய்க்காக ஏ.டி.எம் வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, மருத்துவ உலகம் கொலஸ்ட்ரால் பற்றி, தான் ஏற்படுத்தி வந்த விழிப்புஉணர்வை வாபஸ் பெற்றுக்கொண்டது. மருத்துவ ஆராய்ச்சி இதழ்களில், கொலஸ்ட்ரால் பற்றிய தொடர் விவாதங்கள் உருவாகவும், கொழுப்பு பயமுறுத்தலை வாபஸ் பெறவும் காரணம் 2015-ம் ஆண்டின் யு.எஸ்.டயட்ரி அட்வைசரி கமிட்டியின் (USDA) அறிவிப்புதான். நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் குதிரை வண்டியில் மைக் கட்டி பிரசாரம் செய்யும் அளவுக்கு `கொலஸ்ட்ரால் உடம்புக்கு நல்லது அல்ல. எண்ணெய் மோசமானது’ என்று சொல்லிக்கொண்டிருந்த அமெரிக்க உணவியல் நிபுணர்கள், தலைகீழாக பல்டியடித்தார்கள். அமெரிக்காவின் பிரதான உணவாக இருந்த கொழுப்பு உணவுகள், இதய நோய் பயத்தால் ஒரு கட்டத்தில் தீவிர பிரசாரம் மூலம் கைவிடப்பட்டன. முட்டைகளையும், இறைச்சியையும் மிகக் குறைவாக அமெரிக்க மக்கள