கடைசி மரமும் வெட்டுண்டு, கடைசி நதியும் விடமேறி., கடைசி மீனும் பிடிபடும்போதுதான் உரைக்கும், பணத்தை சாப்பிட முடியாதென்று..
உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே -புறநானுறு
நிலத்தையும், நீரையும் பொறுத்துதான் நம் உண்ணும் உணவின் சத்துக்கள் இருக்கின்றன, ஆனால் இன்று நம் பசுமை புரட்சி(Green reevaluation) என்ற பெயரில் இரண்டையும் எவ்வளவு அசுத்தப்படுத்தமுடியுமோ, நச்சாக முடியுமோ அனைத்தையும் செய்யத்துவிட்டு இன்னும் செய்துகொண்டும் இருகின்றோம். ஆனால் இதனால் வேளாண் குடிமக்களின் வாழ்க்கையும் பொருளாதாரமும் வளர்த்துவிட்டதா என்றல் நிச்சயமாக இல்லை.
ரசாயன உரங்கள் சந்தைக்கு வரும்முன் விளைபொருட்களின் விலை ஒரு நிலைத்தன்மையுடன்தான்( constant ratio) இருந்தது இப்போது எந்த ஒரு அறுவடையின் போதும் வேளாண்குடிமக்களின் எண்ணம் செலவு செய்த ரூபாய் வந்தால் போதும் என்பதுதான். ஆனால் அதற்கே வழியில்லாமல் இருக்கிறது இன்றய வேளாண்மை. ஆனால் வேளாண்குடிமக்களிடமிருந்து வாங்கும் விலைதான் குறைவு மற்றபடி விதைகளின் விலை, இடுபொருட்களின் விலை எல்லாம் எல்லா ஆண்டும் ஏறிக்கொண்டுதான் இருக்கிறது எது எப்படி என்பது மட்டும் புரியவில்லை.
ரசாயன உரங்களின் தாக்கம் பற்றி இப்போதுதான் நாம் பேச ஆரம்பித்திருக்கிறோம், மிகவும் தாமதமாகாத்தான் அதுவும். பசுமை புரட்சி , மரபணு மாற்றப்பட்ட விதைகள், ரசாயன உரங்கள் எல்லாமும் தவறான முடிவு என்று வேளாண் துறை அதிகாரிகளே இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சில வேளாண் குடிமக்களும் இதை புரிந்துகொண்ட இயற்கை வேளாண்மை பக்கம் திரும்பியிருக்கிறார்கள் இது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.ஆனால் இனி வரவிருக்கும் அடுத்த தலைமுறை மீது நமக்கு உண்மையான அக்கறை இருந்தால் 90 விழுக்காடு இயற்கை வேளாண்முறைக்கு மாறுவது அவசியமாகும்
இந்த கேடுகெட்ட மத்திய, மாநில அரசுகளை நம்பி பயனில்லை, நாம் தான் நம் தலைமுறைக்காக முன்வந்து மாறவேண்டும்.
பசுமை புரட்சியின் விளைவு
மண் மலட்டுத்தன்மை (Soil Erosion)
இன்று வேளாண்பணியில் நம் செலவிடும் பெரும்தொகை வேதியில் உரங்களுக்கானது இன்றைய நிலையில் வேதிஉரங்கள் பயன்படுத்தவில்லை என்றால் அந்த போகாஅறுவடை நட்டம்தான் என்பது பொதுவான நம்பிக்கை, அது உண்மையும்கூடத்தான். ஏன் என்றல் நாம் அந்த அளவுக்கு மண்ணை அதன் தன்மையிலிருந்து மாற்றிவைத்திருக்கிறோம்.
இரண்டம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வேதிஉப்புக்களை போர் முடிந்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது அதை உரமாக பயன்படுத்தலாம் என்ற முடிவுஎடுக்கப்பட்டது.
முதலில் அது நல்ல விளைச்சலை தந்தாலும் பின்னர் அதன் விளைவுகள் தெரியத்தொடங்கின இப்போதுள்ள மருத்துவமனைகளின் லாபத்தில் பெருமளவு பங்கு இந்த வேதிஉரங்களுக்கு உண்டு.
இப்பொது உள்ள 50 வயதினருக்கு மேலுள்ளவர்கள் மாத மளிகை பொருட்கள் வாங்குவதுபோல் இருதய மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை வாங்குகிறார்கள்.
முழுவதும் மாறவில்லை என்றாலும் நம் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை மட்டுமாவது நாமே விளைவித்து நம்மை காத்துக்கொள்வோம்.
இந்த கேடுகெட்ட மத்திய, மாநில அரசுகளை நம்பி பயனில்லை, நாம் தான் நம் தலைமுறைக்காக முன்வந்து மாறவேண்டும்.
பசுமை புரட்சியின் விளைவு
மண் மலட்டுத்தன்மை (Soil Erosion)
இன்று வேளாண்பணியில் நம் செலவிடும் பெரும்தொகை வேதியில் உரங்களுக்கானது இன்றைய நிலையில் வேதிஉரங்கள் பயன்படுத்தவில்லை என்றால் அந்த போகாஅறுவடை நட்டம்தான் என்பது பொதுவான நம்பிக்கை, அது உண்மையும்கூடத்தான். ஏன் என்றல் நாம் அந்த அளவுக்கு மண்ணை அதன் தன்மையிலிருந்து மாற்றிவைத்திருக்கிறோம்.
இரண்டம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வேதிஉப்புக்களை போர் முடிந்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது அதை உரமாக பயன்படுத்தலாம் என்ற முடிவுஎடுக்கப்பட்டது.
முதலில் அது நல்ல விளைச்சலை தந்தாலும் பின்னர் அதன் விளைவுகள் தெரியத்தொடங்கின இப்போதுள்ள மருத்துவமனைகளின் லாபத்தில் பெருமளவு பங்கு இந்த வேதிஉரங்களுக்கு உண்டு.
இப்பொது உள்ள 50 வயதினருக்கு மேலுள்ளவர்கள் மாத மளிகை பொருட்கள் வாங்குவதுபோல் இருதய மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை வாங்குகிறார்கள்.
முழுவதும் மாறவில்லை என்றாலும் நம் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை மட்டுமாவது நாமே விளைவித்து நம்மை காத்துக்கொள்வோம்.
Comments
Post a Comment